Wednesday, July 21, 2021

Dindigul style biryani. Recipe -தலபாகட்டி பாணி மட்டன் பிரியாணி செய்முறை



Recipe for Mutton Biryani made Tamilnadu Dindigul style biryani. Recipe with pictures.

 

DESCRIPTION

  • Measurements used – 1 cup rice = 250 ml

FOR THE MASALA

  • 5 Green Chillies
  • 2 pieces two inch cinnamon sticks
  • 3 cardamom
  • 3 cloves
  •  th of a nutmeg (Jaadhikai) (Do not use too much)
  • 1 small piece Mace (Jaadhi Pathiri)
  • 2 inch piece ginger
  • 12 cloves Garlic
  • 10 shallots (small onions) (100 grams)

MAIN INGREDIENTS

  • 500 ml Seeraga Samba Rice
  • 500 grams Mutton with bone

OTHER INGREDIENTS

  • 2 tablespoon Ghee
  • 3 tablespoon Sunflower Oil
  • ½ teaspoon Red Chilli Powder
  • ½ cup curd
  • 1 1/2 teaspoon salt
  • 1 hand full Mint Leaves (1/3 cup chopped)
  • 1 hand full Coriander Leaves ((1/3 cup chopped))
  • Juice of half a lime

iNSTRUCTIONS

  1. Before starting to cook, wash and soak the rice for at-least half an hour.
  2. Grind all the ingredients listed under masala paste with half a cup of water. Set aside.
  3. Heat oil and ghee in a pressure cooker and add in the Thalappakatti Biriyani Masala paste. Add in the mutton to the pan.
  4. Add in two cups of water and add in the salt.
  5. Add in the plain yogurt (curd) and red chilli powder.
  6. Mix well and cook the mutton in the masala for 20 minutes on a medium flame. Remove the cooker from heat and wait for the pressure to settle.
  7. Remove the cooked meat to a bowl and roughly measure how much liquid is left behind.
  8. Mine had about 1.5 cups of liquid. Just measure roughly. It need not be accurate.
  9. We require 2 times water to the quantity of rice. So we need to add 4 cups water. There was already 1.5 cups gravy that we measured before. So I added 2.5 cups water to the mixture. Add in the chopped coriander leaves and the mint leaves. Let the mixture come to a boil.
  10. Add back the meat and let it come to a boil again. Check for seasoning. Add more salt if necessary. Drain the soaked rice and add it to the pan.
  11. Wait for it to boil. Add in the lime juice.
  12. Cover the pan with a lid and let it cook for the first four minutes on medium flame.
  13. Open the lid. Gently mix once from the bottom, cover the lid again and simmer for 10 minutes on very low flame.
  14. After that time, open the lid and mix well. The rice will be three fourth cooked. Cook for a couple of minutes more.
  15. Switch off the flame and close the pan with a lid. Do not disturb for the next 20 minutes. The rice will get swollen and absorb all the left out moisture. This time is very important. Do not rush.
  16. After the rest, Enjoy

The rice for making Thalapakatti Style Mutton Biryani Recipe
Thalapakatti style biryani has a very nice flavor that is so different from all the other biriyani. It is made with seeraga samba rice. Seeraga Samba biriyani has to be the pride of Tamilnadu. Seeraga samba is a very aromatic rice. The grain of the rice is very tiny and it gets its name for its resemblance to Cumin seeds, also called as Seeragam/Jeera in Tamil. It has a very distinct taste, fluffs up well when cooked and south Indian biriyani’s are made with this rice. Samba rice is grown for a longer duration than other types of rice. Seeraga samba rice is the most important ingredient for this biryani. Before starting to cook, wash and soak the rice for at-least half an hour.

thalapakatti-mutton-biryani-recipe-6

Masala Paste for making Dindigul Style Mutton Biryani Recipe
Here is what you will need.

Grind all the ingredients listed under masala paste with half a cup of water to a very smooth paste. Set aside.
thalapakatti-mutton-biryani-recipe-1

Cooking the meat / mutton for Thalapakatti Style Mutton Biryani Recipe
Heat oil and ghee in a pressure cooker and add in the Thalappakatti Biriyani Masala paste. Add in the mutton to the pan. For biryani, always use mutton with bone. Bone has a lot of flavour.
thalapakatti-mutton-biryani-recipe-2

Add in two cups of water and add in the salt.
thalapakatti-mutton-biryani-recipe-3

Add in the plain yogurt (curd) and red chilli powder.
thalapakatti-mutton-biryani-recipe-4

Mix well and cook the mutton in the masala for 20 minutes on a medium flame. Ignore the number of whistles in the cooker. Just cook for 20 minutes and remove the cooker from heat and wait for the pressure to settle.

thalapakatti-mutton-biryani-recipe-5

Open the cooker and see if the mutton pieces are cooked well. Cook for 2-3 whistles more if the meat is hard. Set aside.
thalapakatti-mutton-biryani-recipe-7

Remove the cooked meat to a bowl and roughly measure how much liquid is left behind.

thalapakatti-mutton-biryani-recipe-8

Mine had about 1.5 cups of liquid. Just measure roughly. It need not be accurate. Note: My mutton was very hard and I had to cook for an extra 15 minutes. Due to the extra cooking, the mutton stock was a little less. Usually, you will have a little more stock. Do not worry about the amount of stock.

thalapakatti-mutton-biryani-recipe-9

Measurements used – 1 cup rice = 250 ml
We are using 2 cups rice. We require 2 times water to the quantity of rice. So we need to add 4 cups water. There was already 1.5 cups gravy that we measured before. So I added 2.5 cups water to the gravy mixture in a pan. Add in the chopped coriander leaves and the mint leaves. Let the mixture come to a boil.
thalapakatti-mutton-biryani-recipe-10

Add back the meat and let it come to a boil again. Check for seasoning. Add more salt if necessary. Drain the soaked rice and add it to the pan.
thalapakatti-mutton-biryani-recipe-11

Wait for it to boil. Add in the lime juice.
thalapakatti-mutton-biryani-recipe-12

Cover the pan with a lid and let it cook for the first three to four minutes on medium flame.
thalapakatti-mutton-biryani-recipe-13

Open the lid. Gently mix once from the bottom, cover the lid again and simmer for 10 minutes on very low flame.
thalapakatti-mutton-biryani-recipe-14

After that time, open the lid and mix well. The rice will be three fourth cooked. Cook for a couple of minutes more.
thalapakatti-mutton-biryani-recipe-15

Switch off the flame and close the pan with a lid. Do not disturb for the next 20 minutes. The rice will get swollen and absorb all the left out moisture. This time is very important. Do not rush.
thalapakatti-mutton-biryani-recipe-16


கோரக்கர் சித்தர் - korakkar siddhar

கோரக்கர் சித்தர்






















அடுப்புச் சாம்பலில் இருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தரின் பெருமையை இங்கே பார்க்கலாம்.


  • கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.
ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.

மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள்.

மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.

அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண், தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள்.

சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார்.

பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.

மச்சேந்திரர், ‘’சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய்,’’ என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார்.

அடுப்புச் சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.

ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.
வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும், என்றாள்.
‘’உன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா,’’ என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் ‘’என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு,’’ என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.

இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.

கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்பப் பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசிக்கு, மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார்.
மச்சேந்திரரை பார்த்து ‘’குருவே புறப்படுங்கள்; நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம்,’’ என்று அழைத்தார்.

இவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று அரசி பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு, கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர்.

இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார்.

மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.

“அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார்.

உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.

பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம், நீங்கள் யார், என்று கேட்டார்.

அதற்கு அவர், இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை, என்றார்.

கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.

‘’வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன்,’’ என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.

அல்லமர் கோரக்கரை நோக்கி “சரி, உன் திறமையை நிரூபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார்.

கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.
இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர்.

இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.
கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள்.

யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.

‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.

கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.
இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.

கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:

1. கோரக்கர் சந்திர ரேகை
2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்
3. கோரக்கர் ரக்ஷமேகலை
4. கோரக்கர் முத்தாரம்
5. கோரக்கர் மலைவாக்கம்
6. கோரக்கர் கற்பம்
7. கோரக்கர் முத்தி நெறி
8. கோரக்கர் அட்டகர்மம்
9. கோரக்கர் சூத்திரம்
10. கோரக்கர் வசார சூத்திரம்
11. கோரக்கர் மூலிகை
12. கோரக்கர் தண்டகம்
13. கோரக்கர் கற்ப சூத்திரம்
14. கோரக்கர் பிரம்ம ஞானம்

இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

சதுரகிரி மகாலிங்கம் கோவில்

 


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் 


துரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த மலைப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இந்த வனப்பகுதியானது கோரக்கர்,சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என அனுமானிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகிறது. தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும்.

தமிழ் வருடம் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து மன அமைதியையும், தெய்வீக மேன்மையும் கிடைக்கப் பெறுகிறார்கள்.

நாலாபுறமும் மலை சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்றும் ஒரு கூற்று. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.

இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது.

மேலும் சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.

மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கிவருவதாக நம்பப்படுகிறது.



ஐந்து கோவில்கள்

இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

  • மகாலிங்கம்
  • சுந்தரமூர்த்தி லிங்கம்
  • சந்தன மகாலிங்கம்
  • இரட்டை லிங்கம்
  • காட்டு லிங்கம்

ஆடி அமாவாசை

வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

அபூர்வ மூலிகைகள்

சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம் செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகபயன்படுத்த வேண்டும்.

கோயில் பராமரிப்பு

2017-18 ஆண்டின் முக்கிய பூஜைகள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலின் தினசரி பூஜைகள்
கருப்புச் சுவாமி கோயில் : கருப்பு பலா மரத்தடி கருப்பசாமி கோயில்

மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 

பயண வசதி

    சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் அல்லது வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு ரயிலில் திருவில்லிபுத்தூர் வரை பயணித்து பிறகு அங்கிருந்து பேருந்து மார்கமாக சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை சென்றடைந்து அங்கிருந்து இருந்து மலை ஏறலாம். மதுரை பகுதிகளில் இருந்து திருவில்லிபுத்தூர்க்குப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து வத்திராயிருப்புக்கு பேருந்து வசதிகள் உள்ளது. வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மி. தொலைவில் சதுரகிரி மகாலிங்கம் மலையின் அடிவாரமான தாணிப்பாறை உள்ளது. தாணிப்பாறையில் இருந்து மலையேறி, 7 கிமீ பயணித்து சுந்தரமகாலிங்கம் கோயிலை அடையலாம்.

    • தேனியிலிருந்து வருசநாடுக்குப் பேருந்து வசதியுள்ளது. (ஆடி அமாவாசை திருவிழா தினத்தன்று மட்டும் இந்த மலைப்பாதை பயன்படுத்தப்படுகிறது)

    படக்காட்சிகள்


    • சதுரகிரி அடிவாரம், தாணிப்பாறை

    •  
    • தாணிப்பாறை பேச்சியம்மன் & கருப்புச்சாமி

    •  
    • சதுரகிரி மலைப்பாதையில் வழுக்குப் பாறை

    •  
    • குதிரை ஊற்று

    •  
    • இரட்டை லிங்கம்

    •  
    • கோரக்கர் குகை

    •  
    • சித்தர்கள் மற்றும் தீர்த்தங்கள் குறித்தான கல்வெட்டுகள்

    Saturday, July 17, 2021

    Banana Cake Recipe In Tamil

        குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான பனானா கேக் ரெசிபி எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

    தேவையானவை: வாழைப்பழ கூழ் அரை கிலோ, சர்க்கரை முக்கால் கிலோ, சிட்ரிக் ஆசிட் கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் - 125 கிராம், வெனிலா எசன்ஸ் சில துளிகள்.
    செய்முறை: வாழைப்பழ கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கனமான வாணலியில் கலந்துகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி சீராக கிளறிவிடவும். பாத்திரத்தின் ஓரங்களை விட்டு கூழானது நடுவில் உருண்டை போல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    கலர் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதை வெண்ணெய் தடவிய தட்டில் போட்டு, ஆறவிடவும். பிறகு, துண்டுகளாக வெட்டி பட்டர் பேப்பரில் சுற்றி வைத்து பரிமாறினால் சுவையான பனானா கேக் ரெசிபி தயார்!

    Featured Post

    உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

      நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...