Thursday, July 22, 2021

Govt 19: Foods we should take to boost immunity-கோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

 

கோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்




கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் தங்களை வைரஸ் தொற்றிடம் இருந்து காத்துக்கொள்ளுமாறு அரசு மக்களைக் கேட்டுக்கொள்கிறது. இதோடு கூடுதலாக, தங்கள் உணவுப் பழக்கத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தங்கள் கூறுகின்றனர்.

``கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். ஒருமுறை கொரோனா வந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் நம் உடலில் இருக்கும் என்பதும் இன்னும் சரிவர தெரியவில்லை. அதனால், நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதுதான் இப்போதைய தீர்வு. அதே நேரம் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால், கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்’’ என்றர் 

* `வைட்டமின் ஏசத்து நிறைந்த பால், பால் பொருள்கள், ஈரல், பப்பாளி, கேரட், மாம்பழம், போன்ற உணவுப் பொருள்களில் ஒன்றிரண்டாவது தினமும் சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி காட்லிவர் ஆயில் மாத்திரையும் சாப்பிடலாம்.

* `வைட்டமின் டிசெறிவூட்டப்பட்ட பால், எண்ணெய் வகைகளைச் சாப்பிடுங்கள். சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவிலும் இந்த வைட்டனின் இருக்கிறது. தினமும் முற்பகல் 11 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக 15 - 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றால், உங்கள் உடம்பு தனக்குத் தேவையான `வைட்டமின் டியை தானே உருவாக்கிக்கொள்ளும்.

* `வைட்டமின் சிநிறைந்த தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடை மிளகாய் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட வேண்டும். ஃபிரெஷ் முருங்கைக்கீரை சாறும் குடிக்கலாம். நன்கு வளர்ந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 40 முதல் 80 மில்லி கிராம் வரைக்கும் `வைட்டமின் சிதேவைப்படும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட வேண்டுமென்றால், நாளொன்றுக்கு 500 மில்லிகிராம் `வைட்டமின் சிஎடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கொய்யாப்பழம், ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும். ஒரு கொய்யாவில் மட்டும் 200 மில்லிகிராமுக்கு மேலே `வைட்டமின் சிசத்து இருக்கிறது. நெல்லிக்காயைப் பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸாகக் குடிக்கலாம். சட்னியுடன் போட்டு அரைக்கலாம், ஆனால், அரைத்த சட்னியை, தாளித்துக் கொதிக்க வைத்து விட்டீர்களென்றால், `வைட்டமின் சிஆவியாகிவிடும், கவனம். 

* பேரீச்சம் பழத்தில் இருக்கிற இரும்புச்சத்தைவிட, முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம். இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* ஓரக் வேல்யூ (orac value) என்பது நம் உடலில் எதிர்ப்பு சக்தி கூட்டுகிற தன்மை. இந்தத் தன்மை முருங்கைக்கீரை, கோகோ, சீரகம், பட்டை, மஞ்சள்தூள் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. கோகோவை சாக்லேட்ஸ் வழியாக எடுத்துக்கொள்ளலாம். குழம்பு வகைகளில் பட்டை தாளித்துப் பயன்படுத்தலாம். பாலில் மஞ்சள் தூள் சேர்த்துக் குடிக்கலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 4 சிட்டிகை மஞ்சள்தூள்தான் பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்.

* `வைட்டமின் பி 6’ சத்து எல்லா கடலை வகைகளிலும், வாழைப்பழத்திலும் உண்டு. இவற்றையும் சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

* பால், முட்டை, கோழியில் தரமான புரதம் கிடைக்கும். அரிசியையும் பருப்பையும் சேர்த்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிடும்போது ஓரளவுக்குத் தரமான புரதச்சத்து கிடைத்துவிடும். பயறு வகைகள், நட்ஸ் வகைகள், சோயாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம், பட்டாணியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம் ஆகியவை சைவம் சாப்பிடுபவர்களுக்கான புரத சாய்ஸ்.

* கறுப்பு கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப்பயறு, ராஜ்மா போன்றவற்றை முளைக்கட்டி அல்லது ஊறவைத்தால், அதிலிருக்கிற பைடேட் (phytate) எனும் ஆன்ட்டி நியூட்ரிஷியன்ஸ் ஃபேக்டர் இன்ஆக்டிவ் ஆகும். அப்போதுதான், நமக்கு ஸிங்க் சத்து கிடைக்கும். ஸிங்க் பாதாம் பருப்பிலும் இருக்கிறது. அது நமக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்பதற்காகதான் பாதாமை ஊறவைத்துச் சாப்பிடச் சொல்கிறோம். தவிர, கோதுமையிலும், சாக்லேட்டில் இருக்கிற கோகோவிலும் நிறைய ஸிங்க் உண்டு.

* கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட், உளுந்தங்களி போன்றவற்றில் ஓமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.

* குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இதற்கு புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் வேண்டும். ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருக்கிற ப்ரீபயாட்டிக் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குபவை. புளித்தத் தயிரில் புரோ பயாட்டிக் இருக்கிறது. புரோபயாட்டிக் தயிர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எண்ணெயில் பொரித்த, நிறைய நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், டால்டா, மைதா, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* முட்டை, காளான், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் செலினியம் சத்து இருக்கிறது.

* தக்காளி ரசத்தில் லைகோபீன் கிடைக்கும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்திக்கானதுதான். 

* 12 வயதுக்குக் கீழ் இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

* நாளொன்றுக்கு கருஞ்சீரகம் 2 முதல் 4 சிட்டிகை அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* 3 முதல் 5 துளசியிலைகளைத் தினமும் சாப்பிடுங்கள். 

Avoid  activities

* இந்தக் காலகட்டத்தில் விரதம் இருப்பது, டயட் இருப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. லிக்விட் டயட், க்ராஸ் டயட் கூடவே கூடாது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைப்பயிற்சி செய்யுங்கள். டயட் வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

 

Wednesday, July 21, 2021

Gold foods that protect the eyes -கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்

கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்















உண்மையில் பொத்தி பாதுகாக்க வெண்டிய கண்ணை நாம் மொபைல், கணிப்பொறி என எப்போதும் அவற்றை பார்த்துக் கொண்டு அதற்கு சிரமத்தை தந்துவிடுகிறோம். கண் நரம்புகள் பாதித்து சிறு வயதிலேயே கண்ணாடி போடுபவர்கள் இப்போது மிக அதிகம். குடும்பத்தில் கண்குறைபாடு இருந்தால் அது உங்களுக்கும் வரலாம். உணவினால் மாலைக் கண் நோயினால் உண்டாகும் பார்வைக் கோளாறை தடுத்து கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

 

நல்ல உணவுகள் கண் பார்வையை அதிகப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். ஆரோக்கியமான புரதம் மற்றும் விட்டமின்கள் கண்களுக்கு சேரும்போது வயதானாலும் தெளிவாக பார்க்க முடியும் . கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்வையை அதிகரிக்கச் செய்யும். 

 

கிவி :



கிவி மிகச் சிறந்த சத்துக்களை கொண்டது. கண்களில் உண்டாகும் சிரமம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவுபடுத்தும். மழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...

ஆரஞ்சு :



ஆரஞ்சில் அதிக விட்டமின் சி உண்டு. கண்களில் உண்டாகும் செல்சிதைவுகளை தடுக்கிறது. கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும். எச்சரிக்கை! இந்த டீ குடிச்சா நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்குதாம்...

கேரட் :



கேரட் கண்ணிற்கான சிறந்த உணவு. அதிலுள்ள பீட்டா கரோடின் கண் பார்வையை தூண்டும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள்.முடிந்த வரை வாரம் ஒரு நாட்களாவது சாப்பிடுங்கள்

 

மஞ்சள் :



 கலப்படமில்லாத மஞ்சள் உங்களுக்கு பலவித நோய்களிலுருந்து காக்கிறது. ஆனால் நாம் துரதிருஷ்டவசத்திடம் இருக்கிறோம். ராசயனங்கள் கலந்த மஞ்சள்தான் வணிகத்தில் கிடைக்கிறது. ஆகவே மஞ்சள் பொடி ரெடிமெட்டாக வாங்காமல் மஞ்சள் கிழங்கை வாங்கி பொடி செய்து கொள்ளுங்கள். இது கண்களில் 40 வயதிற்கு மேல் கேடராக்ட் வருவதை தடுக்கும்.

 

முட்டை :



முட்டையை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். நாட்டு முட்டைகளையே வாங்கிடுங்கள். இவை கண் பார்வையை தூண்டும். கிட்டப் பார்வை தூரப் பார்வைகளை விரட்டலாம்.

அவகாடோ :



 இதுவும் கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். குழந்தைகளுக்கு கொடுத்து வந்தல் பின்னாளில் வரும் குறைபாடு பிரச்சனைகள் வராது.

 நட்ஸ் :



வேர்க்கடலை, பாதாம், முந்திரி ஆகியவை கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. கண்பார்வைக்கு விடமின் ஈ யும் அவசியமான ஒன்றாகும்.

 

Other foods


இது தவிர அரிசி, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, உளுந்து, சோளம் போன்ற உணவுகள் கண்ணுக்கு நன்மை தருபவை. வெந்தயம், வெந்தயக் கீரை, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, ஜீரகம், கருமிளகு, லவங்கம், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் தவறாது உட்கொள்ள வேண்டும். பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை, இயற்கையாக பழுத்த மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச், கொய்யா, தக்காளி, கருப்பு திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி, அன்னாசி, பலாப்பழம் முதலியவை கண்களுக்கு ஏற்றது. எள் எண்ணெய், மீன் எண்ணெய், நதி மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் ஈரல், முட்டை, பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர், கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மூலிகை கஷாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி, பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது கண்களுக்கு பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.

 

Avoid foods

 எதை தவிர்க்க வேண்டும் காராமணி, ராஜ்மா, சோயாபீன், முலாம்பழம், தர்பூசணி



கண்களை கழுவுங்கள்


காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். 


கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்


வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.

ALCHEMY- METHODS OF MAKING GOLD-ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள்

 

ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் 

ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள்

Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha System









History of Resarch

முற்காலத்தில் "வேதியியல்'' என்றால் "ரசவாத முயற்சிகள்' மட்டுமே. செம்பைப் பொன்னாக்கும் ஆர்வம்தான் பலருக்கும் உயிர்த்து எழுந்தது. அந்நாளில் "" இரசவாதம்'' என்பது கார உலோகங்களைத் தங்கமாக உருமாற்றும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. "" உகந்த வானவியல் சூழ்நிலைகள் நிலவுமானால், காரீயத்தீனை பொன்னாக மாற்ற முடியும்'' என்று பண்டைய இரசாவதியர் நம்பினர்.


வெம்மையூட்டுவதலாலும், பல்வேறு வேதியியல் முறைகளில் சுத்தீகரிப்பதாலும் இந்த உருமாற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்று கருதினர். ஆயினும் இந்த ரசவாத முயற்சிகள்யாவுமே மிகுந்த ரகசியமாப் பாதுகாக்கப்பட்டன.


பண்டைய நாளில் சீனா, இந்தியா தொடங்கி, கிரீஸ் வரை பெரும்பாலான நாடுகளில் இந்த முறை வழக்கி“ல இருந்தது. ஹெல்லியக் காலகட்டத்தில் இரசவாத ஆர்வம். எகிப்திற்கும் பரவிற்று. பின்னர் அரபி மொழிப்பெயர்ப்புகள் பலவும் இலத்தீன் மொழிமாற்றம் பெற்றதால் 12ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் புத்துயிர் பெற்றது.


மத்தியக் கால ஐரோப்பிய இரசவாதியர் பலரும் கனிமஅமிலங்கள், ஆல்கஹால் போன்ற நிகழ்த்தினர். இந்த ஆய்வு எழுச்சி பாராசெல்சஸ் என்பவரின் முயற்சியினால் மருந்தியல் என்னும் துறை உருவானது. இதுவே நவீன வேதியல் துறை மல வழிவகுத்தது. இவ்வாறாக, 19ஆம் நுற்றாண்டு வரை ரசவாதியின் இத்தகைய தங்கம் உருவாக்கும் நம்பிக்கை மறையவில்லை.


சாதாரண உப்புகள், கனிமங்கள், தாதுக்கள் யாவும் உயிரற்று பொருள்களில் இருந்து எளிதில் பெறப்படுவை. ஆனால் ""சர்க்கரைச் சத்து, மாவுப்பொருள், கொழுப்புகள், எண்ணெய்கள், புரதங்கள், மூலிகைச் சத்துக்கள் போன்ற சிக்கலான பொருள்கள் ஒருவித உயிர் விசை உடையவை என்று வேதியிலார் கருதினார். 1807ஆம் ஜான்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ் எனும் சுவீடன் வேதியியலார் தாவரம், விலங்கு போன்ற உயிரிகளில் காணப்படும் பொருளுக்கு "ஆர்கானிக் என்று பெயரிட்டார்.


இத்தகையக் கரிமப் பொருள் சோதனையில் ஈடுபாடு மிக்கவர் ஃப்ட்ரீச் வோஹ்லர் (1800-1882) என்னும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர். வெறும் 28 வயது மாணவர். வினோதமாக. ஒருமுறை தனது சிறுநீருடன் நாயின் சிறுநீரும் கலந்து ஆராய்ந்து வந்தார். அதில் யூரியா கிடைத்ததில் ஆச்சரியமில்ø. ரத்தம், சிறுநீர் ஆகிய உயிரிப் பொருள்களில் யூரியா அடங்கி உள்ளதென இன்று அறிந்ததே. சிறுநீரில் லிட்டருக்கு ஏறத்தாõழ இரண்டரை கிராம் வரையிலும், அதில் ஐந்திலொரு பங்கு அளவு ரத்தத்திலும் யூரியா காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்குள் வளர்சிதை மாற்றங்களால் விளையும் உப்பு இது.


ஆனால் நடந்தது. வேறு கதை, 1828ஆம் ஆண்டு அம்மோனியம் சயனேட்டு எனும் உப்பு தயாரிக்க முனைந்தவர் அம்மோனியம் சயனேட்டும், பொட்டாசியம் சயனேட்டு ஆகிய உப்புகளைச் சேர்த்துச் சுட வைத்தார்.இரட்டைச் சிதைவு முறையில் பாத்திரத்தில் அம்மோனியம் சல்பேட்டு எஞ்சி இருக்க வேண்டும். ஆனால் கரைசல் வற்றி எஞ்சியது பொதுக் கழிவறைகளில் அடிக்குமே அதே நெடி வீம் உப்பு சிறுநீரில் கிடைத்த உப்பு அல்லவா? அம்மோனியம் சயனேட்டு மாதிரியே ஒரே அளவு கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் அணுக்கள் அடங்கிய புதியதோர் கூட்டுப்பொருளா? பெர்சீலியஸிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை "சமகூறுகள் எனும் பொருள்பட ஐசோமர் என்று அதற்குப் பெயரிட்டார். புதிய கலைச்சொல் அறிமுகம் ஆனது.


கனிமப் பொருள்களில் இருந்து ஒரு கரிமப் பொருள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறுதான். பதினேழாம் நூற்றாண்டில் ஹென்னிங் பிராண்டு என்னும் ஜெர்மானிய வணிகர் சிறுநீரையே வாலையில் இட்டுக் காயச்சினார் செம்பை பொன்னாக்கும் முயற்சியாம் இன்றைய ராசிக் கல் மாதிரி அன்றைக்கு விஞ்ஞானக் கல் ஒன்றே பணம் ஈட்ட உகந்த வழியாகக் கருதப்பட்டது. அதற்கான விஞ்ஞானக்கல் ஒன்றை கண்டுபிடிக்கிற முனைப்பு, அந்நாளில் ஃபிலாசஃபர் என்றால் விஞ்ஞானி என்று பொருள், அதனால்தான் ஆய்வாளர்களுக்கு இன்றும் "மாஸ்டர் ஆஃப்பி என்றே பட்டம் வழங்கப்படுகிறது.


அந்த வாலையில் எண்ணெய் பிசுக்குள்ள திரவம் மிஞ்சியது அதை மேற்கொண்டு சூடாக்கியதில் கருத்த வீழ்படிவு கிடைத்தது. ஆனால் அது விஞ்ஞானக் கல் இல்லை. ஆத்திரத்தில் வாலையில் ஒரு பிடி மண்ணை வாரி போட்டார். பக்கத்தில் இருந்த கரித்தூள் டப்பாவையும் காலால் உதைத்து வாணலியில் தட்டினார். என்ன ஆச்சரியம்? வாலையில் பிரகாசான ஓளிர்பொருள் ஒன்று மினுங்கியது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. தாம் எதிர்பார்த்த "மந்திரக் கல் கிடைத்து விட்டது. என்று மனம் வானம் வரை துள்ளியது . ஆனாலும் செம்பைப் பொன்னாக மாற்ற இயலவில்லை.


மனம் முறிந்த ஹென்னிங் கொஞ்ச காலம் அறிவியல் துறவறம் பூண்டார். தமது பரிசோதனைகள் பற்றி எவரிடமும் வாயே திறக்கவில்லை தம் கண்டுப்பிடிப்பை வெகுநாள் மறைத்து வைக்கவும் விரும்பவில்லை. "விஞ்ஞானக் கல் பற்றிய வியப்பை அறிவிது விட்டார்.இயற்கையாகவே இருளில் ஒளிரும் பொருளுக்கு கிரேக்க மொழியில் "பாஸ்பரஸ்' என்று பெயர் ஃபாஸ் என்றால் ஒளி ஃபேராரோ என்றால் சுமந்த என்பது பொருள், ஒளியேந்திய பாஸ்வரத்திற்கு வேதியியல் சூரியன் என்கிற செல்லப் பெயரும் உண்டு.


எப்படியோ இந்தப் பாஸ்வரம் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கவனத்தில் சொக்குப் பொடிதூவிற்று, பிரசித்தி பெற்ற ரசவாதியான ஜோஹன்குங்கெல் (கி.பி. 1630-1702) என்பவர் ஹென்னிங்பிராண்டிடம் பாஸ்வர ரகசித்தைத் தட்டிவரத் திட்டம் இட்டார். இதற்காகத் தம் உதவியாளர் ஜோஹன் டானியல் கிராஃப்ட் என்பவரை ஹாம்பார்க் நகருக்கு அனுப்பினார். எவ்வளவு விலை கொடுத்தாவது அதனைப் பெற்றுவரும்படி கட்டளை. கூடனே பணமும் கொடுத்து அனுப்பினார். தமிழகத்தின் அரிமர்த்தனப் பாண்டியன் மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்க பணம் கொடுத்த மாதிரி.


ஆனால் இந்த கிராஃப்ட் ஒரு தந்திரசாலி, ஹென்னிங் பிராண்டிடம் தாம் பெற்று வந்த கொஞ்சம் "அரைகுறை' ரகசியத்தை ஆசானிடம் ஓப்படைக்கவில்லை. பாஸ்வர ஒளியில் மயங்காதோர் யாரோ? தாமே பாஸ்வரம் தயாரிக்கக் தொடங்கினார். தொடர்ந்து நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆலாப் பறந்து சென்று "பாஸ்வர வெளிச்சம்' பாஸ்வரத்தை உருட்டிக் காட்டி இலண்டன் அரசவைக் கழகத்தினரிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டார்.


இதற்கிடையில் அரசவைக் கழக ஆஸ்தான விஞ்ஞானியான ராபர்ட் பாயில் எனும் வேதியிலார் இது குறித்து வினவினார். அது ஒரு சாதாரணப் பாதரசம் என்றும், மனித உடல் சார்ந்த என்றும் மட்டும் கோடு காட்டினார் டேனியல் கிராஃப்ட் அப்புறம் என்ன, ராபர்ட் பாயில் சுயமாக பரிசோதனைகள் தொடங்கினார். பாஸ்வரக் கண்டுபிடிப்பில் வெற்றியும் பெற்றார். பிற்காலத்தில் ஹாம்பர்க் நகரம் வந்த லீப்னிட்ஸ் எனும் கணித மேதையும், ஹென்னிங் பிராண்டிடம் நட்பு கொண்டு பாஸ்வரம் தயாரிக்க கற்றுக் கொண்டார். ராபர்ட் பாயிலுக்குப் பிறகு இத்தகையப் புதுப்பொருள் தேடும் ரசவாத முயற்சிகள் குறைந்து போயின.

 

Nasa Perseverance Mars rover on mars - செவ்வாய் கிரகம்

 

Mars: Nasa's Perseverance rover's first 100 days in pictures


  • Nasa Perseverance Mars rover
PYRIGHTNASA/JPL-CALTECH/ASU

Nasa's Perseverance rover is celebrating 100 Martian days (sols) since landing on Mars, where it is hunting for signs of past microbial life, and seeking to investigate the planet's geology and past climate.

Since touching down on 18 February, the robot has captured some amazing images from around its landing site, Jezero Crater, a 49km (30 mile) wide impact depression just north of the Red Planet's equator.

A small helicopter, Ingenuity, has also returned aerial images, having made history with the first powered, controlled flights on another planet.

Here is a selection of pictures sent back from the mission so far.



IMAGE COPYRIGHT
NASA/JPL-CALTECH/MSSS
image captionOn 6 April, Perseverance used the Watson (Wide Angle Topographic Sensor for Operations and eNgineering) camera to take this selfie next to the Ingenuity helicopter. This photo is made up of 62 individual images which were stitched together once they were sent back to Earth.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/MSSS
image captionDays earlier, Ingenuity had been deployed from underneath the rover.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/ASU
image captionThe 1.8kg (4lb) helicopter is regarded as a technology demonstration for the potential of aerial mobility in the thin Martian atmosphere.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH
image captionOn 19 April, Ingenuity made history with the first powered, controlled flight on another planet. The chopper, which is visible near the centre of this image, rose to about 3m (10ft) above ground and hovered for several seconds, before touching back down.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH
image captionIngenuity captured its first colour aerial image while on its second flight. The drone hovered about 5m (16ft) above the ground, tilted and moved laterally 2m (6ft), before returning to the spot it took off from. Perseverance's tracks and Ingenuity's shadow are visible on the Martian surface below.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH
image captionIngenuity photographed Perseverance while on its third flight. At the time, the mini-helicopter was about 85m (278ft) from the rover and flying laterally at an altitude of 5m (16ft). One of Ingenuity's feet is also visible at the edge of the image, just below the rover.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH
image captionOn 7 May, Ingenuity reached a height of 10m (33ft), before flying 129m (423ft) to a new landing spot.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH
image captionTwo months earlier, Perseverance went for its first drive since it landed in Jezero Crater. The one-tonne rover is carrying an advanced payload of instruments to gather information about Mars' geology, atmosphere and environmental conditions.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/ASU
image captionPerseverance is equipped with a laser that is designed to help it collect data on the planet's geology. While investigating this 15cm (6in) rock, the instrument left the faint row of dots that is visible near its centre.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/ASU
image captionThe rover is also equipped with a variety of different cameras. This image was taken by the "right eye" of Perseverance's Mastcam-Z, one of a pair of cameras that provide a stereo view similar to what human eyes would see.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/ASU
image captionThis image was taken with the left Mastcam-Z camera and was selected by public vote to be featured as "Image of the Week" for Week 6 of the rover's mission.

1px transparent line
IMAGE COPYRIGHTNASA/JPL-CALTECH/ASU/MSSS
image captionThis image shows Santa Cruz, a hill about 1.5 miles (2.5km) away from the rover. The entire scene is inside Mars' Jezero Crater; the crater's rim can be seen on the horizon line beyond the hill.
1px transparent line

The Perseverance rover has initial funding to operate for one Mars year, roughly two Earth years.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...